தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுச்சேரி அரசு வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி அரசு  வழக்குரைஞர்  தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அரசு  வழக்குரைஞர்  தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் சட்டத்துறையில்  வழக்குரைஞர்கள்  நியமனம் தொடர்பாக, இரு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், புதுச்சேரி சட்டத் துறை அரசு வழக்குரைஞர் நியமனத்தில் இரண்டு இடங்களை காலியாக வைக்க வேண்டும். நான்கு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.

அரசு வழக்குரைஞர் சம்பந்தமான தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் வாதிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஞானசேகர் ஆஜரானார்.

இந்நிலையில், இன்றைய விசாரணையில் புதுச்சேரி அரசு  வழக்குரைஞர்  தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.