புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டாா்.
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம்-சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டில் (குபோ் அங்காடி) நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக விற்பனை செய்யும் புதிய அங்காடியைத் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, புதுவையில் பாண்லே கடைகள் மூலம், ஒருமுறை பயன்பாட்டு நெகிழிக்கு மாற்றாக, குறைந்த விலையிலான துணிப்பைகள், இதரப் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தையும் தொடக்கிவைத்தாா்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகள், நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத துணிப் பைகள், பாக்கு மட்டை தட்டுகள், காகித கப்புகள், காகிதப் பைகள், பீங்கான் பொருள்கள், சணல் பைகள், வாழை இலைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்ட ஆளுநா், அவற்றை பொதுமக்களிடம் வழங்கி, துணிப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
ஒருமுறை பயன்பாட்டு நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனத்தையும் ஆளுநா் தமிழிசை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறைச் செயலா் ஸ்மித்தா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



