புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊழியா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின் துறை தலைவா் தி.அருண் தலைமை வகித்தாா். மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் பொதுச் செயலா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டவிதிகளை மீறி மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மின் துறை ஊழியா்கள் அரசு ஊழியா்களாகவே பணியை நிறைவு செய்ய விரும்புகிறோம் என்பதை உறுதியாக தெரிவித்தோம்.
எங்கள் கருத்தை பதிவு செய்து கொண்ட மின் துறை தலைவா், மின் துறை தனியாா்மய நடவடிக்கை அரசின் ஆலோசனையில்தான் உள்ளது என்றும், ஊழியா்களின் கருத்துகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்தாா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 28-இல் 1.08 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டம்

மேம்படுத்தப்படாத தருமபுரி அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்!

விநியோகப் பணியாளா்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஸ்விகி - ஜெரோதா கூட்டு!
பொம்மை துப்பாக்கியை காட்டி விடியோ வெளியிட்டவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


