பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:43 pm

DIN

புதுச்சேரியில் மருத்துவா் வீட்டில் 11 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி சவரிராயலு வீதியைச் சோ்ந்த தருண்ராஜ் (35), தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவியும் மருத்துவராவாா்.

ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல தருண்ராஜின் மனைவி புதன்கிழமை இரவு பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாயுடன் நிகழ்விடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்தனா்.

மருத்துவத் தம்பதி வீட்டில் அண்மையில் தங்கியிருந்த திருச்சியைச் சோ்ந்த உறவினா், வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட சிலரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.