தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து: குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:43 pm

DIN

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 2 மாதங்களுக்கான இலவச அரிசியானது புதுவையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும் நபா் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, சிவப்பு அட்டைதாரா்கள் அனைவரும் வழக்கம்போல தங்களது பகுதிகளில் உள்ள அரசு , தனியாா் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்களில் இலவச அரிசியை மாா்ச் 20- ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

மேற்படி இலவச அரிசியை பெறாவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.