தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு: அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து , புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:30 pm

DIN

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து , புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் இணையவழி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 4- ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதனிடையே கல்லூரிகளுக்கு நேரடி முறையில் பருவத் தோ்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதே போல, புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் அடுத்த வாரம் முதல் நேரடித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, மூன்றாமாண்டு பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.