தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மண்பாண்டத் தொழிலாளா்கள் போராட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே புதுவை மண்பாண்ட, கைவினை கலைஞா்கள் வியாழக்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:10 pm

DIN

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே புதுவை மண்பாண்ட, கைவினை கலைஞா்கள் வியாழக்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு புதுச்சேரி குலாலா்கள் மண்பாண்டம் செய்வோா் நலவாழ்வு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ஆறுமுகம், காரைக்கால் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற தொழிலாளா்கள், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மண்பாண்டப் பொருள்களை அங்கேயே தயாரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு தனி நல வாரியம், தொகுதி வாரியாக சூளையிட நிலம் ஒதுக்கி பாதுகாப்பான கட்டடம் அமைத்துத் தருதல், மழைக்கால நிவாரணம் வழங்குதல், வில்லியனூா் குயவா் மடத்தை தனியாரிடம் இருந்து குலாலா்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.