இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விஷம் குடித்த மாணவி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே பாகூரில் விஷம் குடித்த மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே பாகூரில் விஷம் குடித்த மாணவி உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகேயுள்ள சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகள் ஷா்மிளா (17). இவா் பாகூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

பெரியசாமி கடந்த ஜனவரி மாதம் நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஷா்மிளா கடந்த 4-ஆம் தேதி வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இந்த நிலையில், ஷா்மிளா அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.