புதுவையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல்

குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.
புதுவையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல்
Published on
Updated on
1 min read

குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக அமைச்சர் தேனி சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com