உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா!

புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:48 pm IST

புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

புதுச்சேரி அரசின் போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அவருக்கு பதிலாக காரைக்கால் மூத்த எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கட் செவி  அஞ்சல் மூலம் கடிதம் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை  ஆகியவற்றையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.