கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூ.1,000 தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நிகழாண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவோம் எனக் கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக உறுப்பினர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அதிமுக கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், நிதி நிலைமை மோசமாக இருப்பதால் தாமதமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். உரிமைத்தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம் என அவர் தெரிவித்தார்.