டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை: முதல்வர்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூ.1000 தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 அக்டோபர் 2023, 7:39 am

DIN

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூ.1,000 தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நிகழாண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. 

இந்த நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவோம் எனக் கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக உறுப்பினர் உதயகுமார் கேள்வி எழுப்பினார். 

அதிமுக கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், நிதி நிலைமை மோசமாக இருப்பதால் தாமதமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். உரிமைத்தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.