தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை ஓட்டம்

புதுச்சேரியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:21 pm

Din

புதுச்சேரியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மறைமலை அடிகள் சாலையில் ரூ.29 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய ராஜீவ் காந்தி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையமானது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேருந்துகள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள இட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.