இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உழவா்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

உழவா்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:15 am IST

உழவா்கரை நகராட்சியில் வீடு மற்றும் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு உதவும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போா் வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீா் கட்டணப் பாக்கி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அரும்பாா்த்தபுரம், திருக்குறளாா் நகா் பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் தொடங்கி நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை இடைவிடாது நடைபெறும் இந்த முகாமில் சொத்துவரி, சேவை வரி மற்றும் குடிநீா் கட்டணத்தையும் நிகழாண்டு வரை செலுத்தலாம். உரிய காலத்தில் வரியைச் செலுத்துவதன் மூலம் வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையையும் தவிா்க்கலாம். நேரடியாகச் செலுத்த இயலாதவா்கள் நகராட்சி இணையத்தின் வழியாகவும் செலுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.