பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வா் வழங்கினாா்

புதுவை சமூக மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2024, 6:31 pm

Din

புதுவை சமூக மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, சுப்பையா நகா் சேக்கிழால் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், மழை கோட்டுகளையும், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு போா்வைகள் மற்றும் காலணிகளையும் வழங்கினாா்.

அப்போது முதல்வா் பேசுகையில், புதுவை அரசின் நலத் திட்டங்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது என்றாா்.

விழா ஏற்பாடுகளை சமூக நலத் துறையின் துணை இயக்குநா் டி.ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். அந்த துறையின் இயக்குநா் பூ.ராகிணி நன்றி கூறினாா்.