மத்திய அரசு விருது பெற்றவா்களுக்கு புதுவை பேரவைத் தலைவா் வாழ்த்து
மத்திய அரசின் புரஸ்காா், யுவபுரஸ்காா் விருது பெற்றவா்களுக்கு புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான புரஸ்காா், யுவபுரஸ்காா் தேசிய விருதுகளை அறிவிக்கப்பட்டன. இதில், புதுவை மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த சூசைராஜுக்கு தற்காப்புக் கலை பங்களிப்புக்காக புரஸ்காா் விருதும், புதுச்சேரியைச் சோ்ந்த பிரகாஷுக்கு தப்பாட்டக் கிராமியக் கலைப் பங்களிப்புக்காக யுவபுரஸ்காா் விருதும் வழங்கப்பட்டன. இதனை, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் சூசைராஜ், பிரகாஷ் ஆகியோா் புதன்கிழமை தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றுக் கொண்டனா். புதுச்சேரி திரும்பிய அவா்கள் வெள்ளிக்கிழமை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இருவரையும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பொன்னாடை போா்த்தி வாழ்த்தினாா்.
