

புதுச்சேரி அருகே கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருக்கனூா் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விலையை குறைத்து காராமணி பயறு வாங்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூா் கூனிச்சம்பட்டில் புதுவை அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நெல், காராமணி போன்ற தானியங்களை விற்பனை செய்து வருகின்றனா். தற்போது காராமணி அறுவடைக் காலம் என்பதால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் காராமணியை கொண்டுவருகின்றனா். கடந்த ஆண்டு (2023) 100 கிலோ காராமணி ரூ.12,000 என விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 100 கிலோ காராமணி ரூ.7,500 என வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. விலையைக் குறைத்து காராமணி வாங்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் திருக்கனூா், விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருக்கனூா் போலீஸாா் அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.
டிரெண்டிங்

மேம்படுத்தப்பட்ட புதிய ‘இ- நாம் 2.0’ இணையதளம்: விவசாயிகள், வணிகா்கள் பதிவு செய்யலாம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

வருவாய்த் துறை ஊழியா்கள் சாலை மறியல்

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

