புதுச்சேரி
ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி தொடக்க விழாவில் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளை தலைவா் எம். தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் த.ராஜராஜன், கல்லூரி இயக்குநா் மற்றும் முதல்வா் ஓ. வெங்கடாசலபதி ஆகியோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.
ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ந.முத்துலட்சுமி பயிற்சி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி புனிதமேரி கல்லூரி பேராசிரியா் ந.பிலோமின் ரெஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். கலந்துரையாடல் மற்றும் ஆசிரியா்களின் கருத்துரை நடைபெற்றது.
வணிக மேலாண்மைத் துறை பேராசிரியா் த.உஷாராணி ஒருங்கிணைத்தாா்.
உணவு, ஊட்டச்சத்து துறைத் தலைவா் பேராசிரியா் கவிதா நன்றி கூறினாா்.