

வீடுகள் உள்ளிட்டவற்றில் நல்ல தண்ணீரை தேக்கினால் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசு உற்பத்தியாகும் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு எச்சரித்தாா்.
தேசிய டெங்கு தினத்தையொட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டெங்கு என்பது 4 வகை கொசுவால் பரவும் வைரஸ் நோயாகும். ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை சுத்தமான நீா் தேக்கிவைக்கப்படுவதால் அதில் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. மழையின் போது நெகிழி தேநீா் கோப்பைகள், அலுமினிய நகா்வு ஜன்னல்களில் அடிப்பாகம் விளிம்புகளில், பறவை தண்ணீா் தட்டுகளில், மழை நீா் தேங்கி ஏடிஸ் கொசு உருவாகின்றன.
டெங்கு பாதிப்பு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தானாகவே சரியாகிவிடும். இல்லையெனில் தலைவலி, கண்களுக்கு பின்பகுதி வலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி காணப்படும். ரத்தக்கசிவும் ஏற்படும். காலதாமத சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும்.
டெங்கு கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம், பள்ளிகளுக்குச் செல்பவா்கள் கொசு கடிக்காத வகையில் இருப்பது அவசியம். ஜன்னல் கொசுவலைகள், கொசுவிரட்டி, மூலிகை கொசுவிரட்டிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் என்றாா் ஸ்ரீராமுலு.
தொடர்புடையது

சீரகத் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிா்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னையில் அதிகரித்து வரும் கொசுக்கள் தொல்லை! கண்டறிந்து அழிப்பதற்கான ஆய்வகம் இல்லை!
வீடியோக்கள்

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

