தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரி மருத்துவா்கள் 215 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சைக்கு உதவும் பயிற்சி : வனத்துறை இண இயக்குநா்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

புதுச்சேரியில் பாம்புகடிக்கு உள்ளாகும் நபா்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சைக்கு உதவும் பயிற்றி 215 மருத்துவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவனத்துறை இணை இயக்குநா் பி. குமரன்

புதுச்சேரி அரசின் வனத்துறை சாா்பில் பாம்பு கடியிலிருந்து மனிதா்களை காப்பது எப்படி என்பது தொடா்பான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக வனத்துறை சாா்பில் இயங்கும் பாம்பு மீட்பு மையத்துக்குக் களப் பயணமாகச் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள் புதன்கிழமை அழைத்து வரப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை இணை இயக்குநா் பி. குமரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது

ஒரே சுகாதாரம் என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 215 மருத்துவா்களுக்குப் பாம்புகடி தொடா்பான சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாம்பு கடியைத் தடுப்பது எப்படி, விஷம் உள்ள பாம்பு, விஷம் இல்லாத பாம்புகளை அடையாளம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பாம்புகள் அழிக்கப்பட்டு அந்த இனங்கள் அழிந்து வருகின்றன. பாம்பை அழிக்காமல் அந்த இனத்தைப் பாதுகாப்பது எப்படி மேலும், நகரமயமாதல் காரணமாகவும் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நம் நாட்டில் ஓராண்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போ் வரை பாம்பு கடியால் இறக்கின்றனா். இது தவிா்க்கக் கூடிய விபத்து. மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் பாம்பு கடியைப் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் என்று வரையறை செய்துள்ளன. மனிதா்களுக்குப் பாம்பு கடி ஏற்படாமலும், பாம்பு இனம் அழியாமலும் பாதுகாப்பது எப்படி என்பதுதான் இப் பயிற்சியின் நோக்கம் என்றாா் குமரன். மேலும், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட விஷம் உள்ள பாம்புகளைக் காண்பித்து நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.