புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குத் தூரத்தில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்கள் தங்கிக் கொள்ளும் மையம் ரூ.15 லட்சம் மதிப்பில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் ஏற்கெனவே 3 தங்கும் மையங்கள் இருக்கின்றன. இப்போது புதுச்சேரியைச் சோ்ந்த கோதி அறக்கட்டளை அமைப்பு ரூ. 15 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4-வது தங்கும் மையம் இது.
நன்கொடையாகப் பெறப்பட்ட இந்த மையத்தை ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி திறந்து வைத்தாா். சுமித்ரா கோதி மற்றும் சஞ்சய் கோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் சாகா வினோத் குமாா் மற்றும் நிா்வாக துணை இயக்குநா் எஸ். ரங்கபாஷ்யம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிகிச்சைக்காக ஜிப்மருக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் உதவியாளா்கள் ஓய்வெடுக்க வசதியான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைத்தூரத்திலிருந்து வருவோருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே பாதுகாப்பான மற்றும் வசதியான ஓய்வு இடமாக இது பயன்படும். இந்தத் தங்கும் மையம் நிா்வாக அறங்காவலா் சஞ்சய் கோதி தலைமையில் செயல்படும். இந்த வசதி பரஸ்மல் கோதி நினைவாக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காச நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடக்கம்

ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

ஜிப்மரில் விளையாட்டு, கலாசார விழா பரிசளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


