47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 9:07 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு பெண்களின் உறுதி, திறன் மற்றும் சாதனைகளைப் போற்றி கொண்டாடியதுடன், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அரசின் ஆணையா் மற்றும் செயலா் அ.முத்தம்மா முதன்மை விருந்தினராகவும், ஜிப்மா் மூத்த நிதி ஆலோசகா் வா்ஷினி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனா்.

ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா்சிங் நெகி தலைமை தாங்கினாா். ‘பெண்களின் மனநலன்’ என்ற தலைப்பில் மியாட் மருத்துவமனையின் மன நல ஆலோசகா் மருத்துவா் லக்ஷ்மிபிரபா சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவ மாணவிகள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.