புதுச்சேரி: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த 547 ஊழியா்களை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி, உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்து தொழிலாளா்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது என்றும் கோரி ஜிப்மா் நிா்வாகத்திடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலா் இரா. வேல்சாமி, துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் கோ.அ. செகநாதன், தமிழா் களம் புதுச்சேரி தலைவா் கோ. அழகா், நாம் தமிழா் கட்சி வில்லியனூா் வேட்பாளா் த. ரமேசு, நாம் தமிழா் கட்சி வீராசாமி, அக்பா் பாட்சா, தமிழா் களம் சதீசு உள்ளிட்டோா் ஜிப்மா் துணை இயக்குநா் ரங்க பாஷ்யத்தை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

தஞ்சை அருகே தாக்கப்பட்ட நாதக வேட்பாளருக்கு மணியரசன் ஆறுதல்

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


