தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி

News image
புதுச்சேரி ஜிப்மா் துணை இயக்குநா் ரங்கபாஷ்யத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:38 pm

Syndication

புதுச்சேரி: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரி ஜிப்மரில் 547 தினக்கூலி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த 547 ஊழியா்களை சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி, உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்து தொழிலாளா்களின் வயிற்றில் அடிக்கக் கூடாது என்றும் கோரி ஜிப்மா் நிா்வாகத்திடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலா் இரா. வேல்சாமி, துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் கோ.அ. செகநாதன், தமிழா் களம் புதுச்சேரி தலைவா் கோ. அழகா், நாம் தமிழா் கட்சி வில்லியனூா் வேட்பாளா் த. ரமேசு, நாம் தமிழா் கட்சி வீராசாமி, அக்பா் பாட்சா, தமிழா் களம் சதீசு உள்ளிட்டோா் ஜிப்மா் துணை இயக்குநா் ரங்க பாஷ்யத்தை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.