மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

தஞ்சாவூரில் புதன்கிழமை செல்லப்பா உருவப் படத்துக்கு புதன்கிழமை மலா் தூவி முழக்கங்கள் எழுப்பிய தமிழ், கலை இலக்கிய அமைப்பினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:38 pm

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தேனிசை செல்லப்பா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், செல்லப்பாவின் லட்சியமான தாய் மொழி தமிழைப் பாதுகாப்போம், தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்டங்களையும், தமிழீழம் அமைவதற்கான ஆதரவுகளையும் முன்னெடுப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம், தெற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, எழுத்தாளா் சாம்பான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாநிலத் துணைச் செயலா் முகிலன், மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மை. விக்டா், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் ஆா். லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.