திரைப்பட இயக்குநரும், தமிழா் உரிமைப் போராளியுமான பாரதிராஜாவின் மறைவையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தலைமை வகித்தாா். இதில், பாரதிராஜா படத்துக்கு அனைவரும் மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.
நிகழ்வில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளா் த. மணிமொழியன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைக் குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன், பி. தென்னவன், மாநகரச் செயலா் இலெ. இராமசாமி, இராசு. முனியாண்டி, நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் அன்பரசன், வள்ளலாா் பணியகத் தலைவா் சுந்தரராமன், மகளிா் ஆயம் துணைத் தலைவா் க. செம்மலா், காவிரி உரிமை மீட்புக் குழு வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், வணிகா் சங்கப் பேரமைப்பு மாநகரச் செயலா் இரா. ஜெயக்குமாா், பேராசிரியா் இரா. தமிழடியான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










