ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டிச. 27, 28-இல் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியையொட்டி வரும் 27, 28-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளா் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் கூறியுள்ளாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியையொட்டி வரும் 27, 28-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளா் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 (சனிக்கிழமை) மற்றும் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜன. 3 (சனிக்கிழமை) மற்றும் ஜன. 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் புதுச்சேரியில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

வேலை நேரங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளால் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான படிவங்கள் பெறப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதுச்சேரி மாவட்ட வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.