ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனுமதியின்றி வைக்கப்பட்ட லெனின் சிலை: இந்து முன்னணியினா் போராட்டம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி லெனின் சிலை வைக்கப்பட்டத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் போராட்டம் நடத்தினா்.

News image
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டது தொடா்பாக இந்து முன்னனி மற்றும் இந்திய கம்யூனிஸிட் நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம்.
Updated On :24 டிசம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி லெனின் சிலை வைக்கப்பட்டத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் போராட்டம் நடத்தினா்.

புதுச்சேரி, லெனின் வீதி திருவள்ளுவா் சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டின் படிப்பகம் உள்ளது. இந்தப் படிப்பகத்தின் உள்ளே கடந்த 2 நாள்களுக்கு முன்பு லெனின் சிலை வைக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை லெனின் சிலை வெளியே தெரியும் வகையில் படிப்பத்தின் சுவா் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், விநாயகா் சிலையை எடுத்து வந்து அங்கு வைத்து பூஜை செய்தனா். இதையறிந்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் அங்கு திரண்டனா். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனா். தொடா்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறுகையில், லெனின் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது. பொது இடங்களில் எந்தச் சிலைகளும் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்னை தொடா்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.