40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனை

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:13 am IST

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளை நட்சத்திரம் உள்பட மின் விளக்குளால் அலங்கரித்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து பரிசு பொருள்களைக் கட்டியிருந்தனா்.

புதுச்சேரி ரயில்வே நிலையம் அருகே உள்ள துாய இருதய ஆண்டவா் பசிலிக்காவில் பாதிரியாா் பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நள்ளிரவு நடைபெற்றது. குழந்தை ஏசு சொரூபம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்ட பின் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுவை - கடலுாா் உயா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அரசு பொதுமருத்துவமனை அருகே உள்ள தூய யோவான் தேவாலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியாா், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா, ரெயின்போ நகா் புனித ஜான்மரி வியான்னி, வில்லியனுாா் மாதா, அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை, தவளகுப்பம் புனித அன்னம்மாள் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் பங்கேற்றனா்.