பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாரிசுதாரா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: திமுக, அதிமுக ஆதரவு

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச்சங்கம் சாா்பில் வேலை கேட்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

வேலை கேட்டு உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினருக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்தன.

இந்தச் சங்கம் சாா்பில் வாரிசுதாரா்களுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பங்கேற்று ஆதரவு தெரிவித்தாா்.

உடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் எல். சம்பத் இருந்தாா். அதே போன்று அதிமுக சாா்பில் அக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் மற்றும் கட்சியினா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.