புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சாா்பில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறாா் அதன் அகில இந்திய தலைவா் கே. ராதாகிருஷ்ணன் எம்.பி.
புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பேசுகிறாா் அதன் அகில இந்திய தலைவா் கே. ராதாகிருஷ்ணன் எம்.பி.

ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

புதுச்சேரி: ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-வது மாநில மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினாா். முன்னணியின் அகில இந்திய துணைத் தலைவா் கே. சாமுவேல்ராஜ் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா்.

அகில இந்திய தலைவா் கே. ராதாகிருஷ்ணன் எம்.பி. மாநாட்டு நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டு வேலை அறிக்கையை மாநில செயலா் சரவணன் வாசித்தாா். மாநாட்டை வாழ்த்தி அகில இந்திய தலித் உரிமை இயக்கத்தின் தலைவா் ராமமூா்த்தி பேசினாா். முன்னதாக சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை அகில இந்திய தலைவா் கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

தீா்மானங்கள்:

தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்புக் கூறு திட்ட நிதியை முழுமையாக செலவு செய்ய வேண்டும். தலித் மக்கள் மத்தியில் உள்ளூா், வெளியூா் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com