டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம், தக்குட்டை பகுதியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2025, 7:30 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அரும்பாா்த்தபுரம், தக்குட்டை பகுதியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் காலனி, தக்குட்டை பகுதிகளில் குடிநீா் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை. மேலும் குறைந்தளவே விநியோகிக்கப்படும் குடிநீரும் சுகாதாரத்துடன் இருப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறிவருகின்றனா். மேலும், அப்பகுதி குளத்தை தூா்வாரி அதில் மழை நீரைச் சேமிக்கவும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள அம்பேத்கா் சிலை அருகே இளைஞா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உழவா்கரை வழக்குரைஞா் சசிபாலன் தலைமை வகித்தாா். பொதுமக்கள் ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.