தாராபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் யுவராஜ் மகேஷ் தலைமை வகித்தாா்.
இதில், தாராபுரம், என்.என்.பேட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் கடை பொதுமக்களுக்கு இடையூறாகவும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, இந்த மதுக் கடையை அகற்றுவதற்கு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தவெக மாவட்ட இணைச் செயலாளா் ஷேக் பரீத், நகரச் செயலாளா் அபுதாஹிா், வடக்கு நகரச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


