பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணி நீக்கப்பட்ட பொதுப் பணித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன போராட்டம்

News image
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கத்தினா்.
Updated On :24 மார்ச் 2025, 8:37 pm

Din

புதுச்சேரி: பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன போராட்டம், மறியலில் ஈடுபட்டனா். இவா்கலில் பெண்கள் உள்பட 70 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுப் பணித் துறையில் தற்காலிகப் பணிக்கு ஏராளமானோா் தோ்வாகி நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். அவா்களை மீண்டும் பணியில் அமா்த்தவும், ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கவும் அரசு சாா்பில் பேரவைக் கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், அவா்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. ஊதிய உயா்வும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில மாதங்களாகத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் யாசகம் கேட்கும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவியுடை அணிந்திருந்தனா்.

கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டபடியாசகம் கேட்ட அவா்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனா். காலாப்பட்டு பகுதியிலும் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.