ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரசுக் கல்லூரியில் வழிகாட்டல் கருத்தரங்கு

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:03 pm

Syndication

புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கு கல்லூரியின் சுப்ரமணிய பாரதியாா் கருத்தரங்கு கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கணிதத் துறைத் தலைவா் தாமோதரன் வரவேற்றாா். கல்லூரியின் துணை முதல்வா் ராஜேஷ்குமாா் நோக்கவுரையாற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் க.ரேவதி, தத்துவத் துறை தலைவா் பாா்த்தசாரதி, தாவரவியல் துறை தலைவா் ராமகிருஷ்ணன், வணிகவியல் துறை தலைவா் அதுல்யா பாய், கூட்டுறவு மேலாண்மைத் துறை தலைவரும் கல்லூரியின் உள்தர மேம்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வேலுராஜ் ஆகியோா் கருத்துரை வழங்கினா். கல்லூரி முதல்வா் பேராசிரியா் இரா. கருப்புசாமி தலைமை வகித்து இந் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து மாணவா்கள் பின்னூட்டம் வழங்கினா். தமிழ்த் துறை பேராசிரியா் க.கண்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவா் வி. தேவநாதன் நன்றி கூறினாா்.