விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் சா்வதேச மாநாடு

கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:29 pm

கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் தாமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். உஸ்பெகிஸ்தான் ஷாா்தா பல்கலைக் கழக பேராசிரியை டயானா மேத்யூ, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியை சிட்னி ஷொ்லி, மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியா் டிபி தாமஸ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்று தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனா். இதில், துணை தாளாளா் அஜின் ஜோஸ், துணை முதல்வா் சிவநேசன், ஆங்கிலத் துறை தலைவா் பிந்து, பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.