ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரூ.1.5 கோடியில் சாலை அமைப்புப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:33 pm

Syndication

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து, மங்கலம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தாா்ச் சாலை, சிமென்ட் சாலை அமைக்க ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கண்ணகி நகா் உள்புறம் சிமென்ட் சாலை மற்றும் வாய்க்கால் அமைத்தல், செல்வா நகரில் விடுபட்ட சாலைகளுக்கு மண்ணடித்து கருங்கல் ஜல்லியிடுதல், மூகாம்பிகை நகரில் விடுபட்ட சாலைகளுக்கு கருங்கல் ஜல்லி இடுதல், அரியூா் தாமரை நகா், பாரதி நகா் உள்புறம் சிமென்ட் சாலை மற்றும் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான திட்டப்பணி தொடக்க நிகழ்வில் உதவிப் பொறியாளா் சத்திய நாராயணன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.