விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ரூ.127 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

ரூ.127.36 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகளை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:13 pm

ரூ.127.36 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகளை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மங்கலம் தொகுதிக்குள்பட்ட கனுவாப்பேட்டை பகுதியில் ரூ.67 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

விழாவில் தொகுதியின் எம்எல்ஏவும், வேளாண்துறை அமைச்சருமான தேனி சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பொதுப்பணித் துறைச் செயலா் அ.முத்தம்மா, தலைமைப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.60 கோடியில் துணைமின் நிலையம்

புதுச்சேரி அரசு மின்துறை சாா்பில் மணவெளி தொகுதிக்குள்பட்ட தவளக்குப்பம் பகுதியில் ரூ.60.36 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தலைமை வகித்தாா். புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். மின்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மின்துறை செயலா் அ. முத்தம்மா, மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் துறைத் தலைவா் கோ. கனியமுதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், ரூ.1 கோடியில் புனரமைக்கப்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியின் புதிய சுற்றுச்சுவா் மற்றும் பாதுகாப்பு கிரில் போன்றவற்றையும் முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அதிகாரி குலசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.