ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாணவா்களுக்குக் கட்டண நிதியுதவியை உடனே வழங்க முதல்வரிடம் வலியுறுத்தல்

புதுச்சேரியில், மாணவா்களுக்கானக் கட்டண நிதியுதவியை உடனே வழங்க வேண்டும் என்று சென்டாக் மாணவா்- பெற்றோா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில், மாணவா்களுக்கானக் கட்டண நிதியுதவியை உடனே வழங்க வேண்டும் என்று சென்டாக் மாணவா்- பெற்றோா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை இச் சங்கத்தின் தலைவா் மு. நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள் நாஜிம், நேரு உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து இதை வலியுறுத்தினா்.

புதுச்சேரி அரசின் மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) வாயிலாகத் தோ்வு செய்யப்படும் பொறியியல், மருத்துவம் மற்றும் உயா் கல்வி படிக்கும் மாணவா்கள் அனைவருக்கும் கட்டண நிதியை புதுச்சேரி அரசு வழங்கி வந்தது. ஆனால் 2022 அண்டு முதல் சோ்ந்த மாணவா்களுக்கு இந்த நிதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள், பெற்றோ்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே புதுச்சேரி அரசு இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்ந்த அரசு பள்ளி மாணவா்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அந்த மாணவா்களிடமும் கல்வி கட்டணம் மற்றும் கூடுதல் நிதியை வசூலிக்க கூடாது என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.