செவிலியா் கல்லூரியில்  முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஸ்ரீ மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புத் தொடக்க விழாவில் பேசுகிறாா் அதன் தலைவா், மேலாண் இயக்குநா் எம். தனசேகரன்.
Published on

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா மற்றும் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீ மணக்குள விநாயகா் செவிலியக் கல்லூரி முதல்வா் எ. முத்தமிழ்செல்வி வரவேற்றாா். ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத்தின் தலைவா், மேலாண் இயங்குநா் எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் மருத்துவா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், துணைச் செயலா் வேலாயுதம், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குநா் காக்னே, டீன் அகாதெமிக் காா்த்திகேயன், டீன் ஆராய்ச்சி சஞ்சய், மருத்துவக் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் பாராட்டி பேசினா்.

செவிலிய மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com