ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனிகளின் கிடங்குகளிலிருந்து ஆய்வுக்கு மாத்திரைகள் சேகரிப்பு

புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனி கிடங்குகளிலிருந்து மாத்திரைகளை ஆய்வுக்காக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் புதன்கிழமை எடுத்துச் சென்றனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 6:07 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 மருந்து கம்பெனி கிடங்குகளிலிருந்து மாத்திரைகளை ஆய்வுக்காக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் புதன்கிழமை எடுத்துச் சென்றனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சோதனையில், உரிமமின்றி ரூ.99.47 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அப்போது பிரைமரி பேக்கிங் மாத்திரைகள், அலுமினிய பாயில்கள் மற்றும் அட்டை பெட்டிகளும், ஆவணங்களும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் போலீஸாருடன் புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளா்கள் இணைந்து மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கிடங்குகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சோதனை செய்ய முயன்றபோது அங்குள்ள கதவுகளை உடைத்து பரிசோதனைக்கான மாத்திரைகளை எடுத்து சென்றனா். உரிமம் இல்லாமல் பிரபல நிறுவனங்களின் பெயரில் மாத்திரை தயாரித்தல், போலி மாத்திரை மற்றும் காலாவதி மாத்திரை என பல வகையில் இக் கிடங்குகளில் உள்ள மாத்திரைகள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் மாத்திரைகளை ஆய்வு செய்த பிறகே முழு விவரம் தெரிய வரும் என்று சோதனையில் ஈடுபட்டுள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.