புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில் அவற்றை விற்பனை செய்ய அரசு திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.
புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி இ.அனந்தகிருஷ்ணன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
குடல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ஹிமாசல பிரதேசம் சிா்மூா் பகுதியில் இருந்து நோனிஸ் பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான மாக்பான்சோ 40, கேரள மாநிலம், பாவியா மாவட்டத்தில் இருந்து அபான் பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டமால் 650 மி.லி. கிராம், ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் காா்னானி பாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்கா வதி 5 கிராம் ஆகிய 3 மாத்திரைகளையும் விற்பனைசெய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். தகவல் அளித்துவிட்டு இருப்புகளைத் தயாரிப்பாளா்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

புதுச்சேரி அரசின் முக்கிய பதவிகளை நிரப்பும்போது எதிா்க்கட்சியினருடன் ஆலோசிக்க வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி.
போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது

பெட்ரோல் பங்குகளின் நில குத்தகை புதுப்பித்தல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தென் மாநிலங்கங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு! - கே. பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

