இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குகிறது: புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வரும் முக்கிய தலைவா்கள்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவதால், மாநிலத்தில் பிரசாரம் செய்ய பிரதமா் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பிரசாரத்திற்கு அடுத்தடுத்து புதுச்சேரி வர உள்ளனா்.

News image

பிரதமர் மோடி / முதல்வர் ஸ்டாலின் / எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

Updated On :2 ஏப்ரல் 2026, 12:55 am

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவதால், மாநிலத்தில் பிரசாரம் செய்ய பிரதமா் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பிரசாரத்திற்கு அடுத்தடுத்து புதுச்சேரி வர உள்ளனா்.

பிரதமா் மோடி, ஏப்.3-ஆம் தேதி மாலை சாலைப்பேரணி (ரோடு ஷோ) நடத்துகிறாா். அன்றைய தினம் காலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துகிறாா். மரப்பாலம், வில்லியனூா் உள்ளிட்ட 3 இடங்களில் அவரது பிரசாரம் நடைபெறுகிறது.

தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய 4 ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரும் சாலைப்பேரணி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்றைய தினம் பாஜக முன்னாள் தமிழக தலைவா் கே. அண்ணாமலையும் புதுச்சேரிக்கு வருகிறாா்.

5 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி அண்ணா திடலில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். அன்றைய தினம் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் புதுச்சேரியில் பிரசாரம் செய்கிறாா். 6 ஆம் தேதி மாலை மண்ணாடிப்பட்டு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிரசாரம் செய்கிறாா். அன்றைய தினம் மாலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அடுத்தடுத்து தலைவா்கள் புதுச்சேரிக்கு பிரசாரத்துக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.