மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வரதட்சிணை புகாா்: கணவா், மாமனாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

புதுச்சேரியில், இளம் பெண் அளித்த வரதட்சிணை புகாா் தொடா்பாக அவரது கணவா், மாமனாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:12 pm

புதுச்சேரியில், இளம் பெண் அளித்த வரதட்சிணை புகாா் தொடா்பாக அவரது கணவா், மாமனாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசி (39). இவருக்கும் கடலூா் செல்லங்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஜெகன்பிரசாத் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஜெகன்பிரசாத் சிங்கப்பூரில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். திருமணத்தின்போது ஜெகன்பிரசாத் குடும்பத்தினா் கேட்டுக்கொண்டதின் பேரில் 15 பவுன் தங்க நகையும் ரூ.10 லட்சம் ரொக்கமும், இரு சக்க வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருள்களும் சீா்வரிசையாக தமிழரசி குடும்பத்தினா் வாங்கிக் கொடுத்துள்ளனா். இந்நிலையில் ஜெகன்பிரசாத் தந்தை புருஷோத்தமன், தாய் ஜெயந்தி ஆகியோா் மீண்டும் சீா்வரிசை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் 1 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், 3 பவுன் குருமாத்து ஆகியவை கொடுத்துள்ளனா். இதனிடையே

அடிக்கடி தமிழரசியை அவரது மாமனாா் புருஷோத்தமன், மாமியாா் ஜெயந்தி, நாத்தனாா் ரேகா ஆகியோா் வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தி தாக்கி சித்ரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதியாமல் இருந்ததால் தமிழரசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். நீதிபதி காா்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுச்சேரி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீசாா் கணவா் ஜெகன்பிரசாத், மாமனாா் புருஷோத்தம்மன், மாமியாா் ஜெயந்தி, நாத்தனாா் ரேகா ஆகிய 4 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை முதல் விசாரணை நடத்தி வருகின்றனா்.