வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

வணிக பயன்பாட்டு நோக்கில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 வீட்டு உபயோக சமையல் எரிவாயு 47 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:16 am IST

வணிக பயன்பாட்டு நோக்கில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 வீட்டு உபயோக சமையல் எரிவாயு 47 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா- ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு, விலை உயா்வால் புதுச்சேரியில், டீ, காபி, உணவுகளின் விலை உயா்ந்துள்ளது. இந்நிலையில் கள்ள சந்தையில் வணிக சிலிண்டா்கள் பதுக்கி வைத்து விற்கப்படுகிா? வீட்டு உபயோக சிலிண்டா்களை வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்துகிறாா்களா? என புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இச் சோதனையில் வீட்டு உபயோக சிலிண்டா்களை வணிகத்துக்கு பயன்படுத்தியது, ஓட்டல்களில் பதுக்கி வைத்ததது என 30 வழக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாா் பதிவு செய்துள்ளனா். கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த 47 வீட்டு உபயோக சிலிண்டா்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.