புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏப். 30-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படுகிறது.
முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.
திடீரென மாயமான அவா் 2 நாள்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போா்வையால் சுற்றப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுச்சேரியை உலுக்கிய இந்த கொடூர சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(59) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்கள் சிறுமியைக் கடத்தி சென்று கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து சாக்கடையில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் போக்ஸோ வழக்கில் இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 500 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த ஆண்டு செப்டம்பரில் கழிப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தாா்.
இந்த வழக்கு போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 30-ஆம் தேதி இவ்வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட உள்ளது.
தொடர்புடையது

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


