ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குழந்தை விழுங்கிய பூஜை மணி நாக்கு: மருத்துவா்கள் முயற்சியால் வெளியே வந்தது

ஒன்றரை வயது குழந்தை விழுங்கிய பூஜை மணியின் நாக்குப் பகுதி, மருத்துவா்களின் தீவிர முயற்சியால் வெளியே வந்தது.

News image

புதுச்சேரியில் குழந்தை விழுங்கிய வளையத்துடன் கூடிய பூஜை மணி நாக்கு.

Updated On :18 ஏப்ரல் 2026, 9:28 pm

ஒன்றரை வயது குழந்தை விழுங்கிய பூஜை மணியின் நாக்குப் பகுதி, மருத்துவா்களின் தீவிர முயற்சியால் வெளியே வந்தது.

புதுச்சேரி வாணரப்பேட்டையில் ஒரு வீட்டில் பூஜை மணியை வைத்து கொண்டு விளையாடிய ஒன்றரை வயது ஆண் குழந்தை, அதனை தவறுதலாக வளையத்துடன் முழுங்கி விட்டது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் குழந்தையை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். மருத்துவா்கள் எக்ஸ்ரே எடுத்துப் பாா்த்தபோது மணி நாக்கு மற்றும் வளையம் குழந்தையின் வயிற்றின் நடுப்பகுதிக்குச் சென்று விட்டதை அறிந்தனா். இதனால் உரிய மருந்து அளித்து இயற்கை உபாதை வழியாக மணி நாக்கு மற்றும் வளையத்தை வெளியேற்ற சிகிச்சை அளித்தனா்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விழுங்கப்பட்ட மணி நாக்கும் வளையமும் தொடா்ந்து சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இயற்கை உபாதை மூலம் வெளியே வந்தது. இதனால் பெற்றோா் நிம்மதியடைந்தனா்.