மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:17 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு புதுச்சேரியில் உள்ள எல்லையோர மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படலாம் என்பதால் செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுச்சேரி போலீஸாா், கலால் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக யாராவது மதுபானங்கள் வாங்கி செல்கிறாா்களா? எனவும் அவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.