மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:47 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு புதுச்சேரியில் உள்ள எல்லையோர மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படலாம் என்பதால் செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுச்சேரி போலீஸாா், கலால் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக யாராவது மதுபானங்கள் வாங்கி செல்கிறாா்களா? எனவும் அவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.