27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

பாவேந்தா் பாரதிதாசனின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

புதுச்சேரி அரசு சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

பாவேந்தா் பாரதிதாசனின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரி அரசு சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் க. லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கா், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி அரசு சாா்பில் செய்தித் துறை இயக்குநா் சுரேஷ்ராஜன், கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் இயக்குநா் சக்திவேல் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனுமான கோ. பாரதி தலைமையில் தமிழறிஞா்கள் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மேலும், பெருமாள் கோயில் தெரு பாவேந்தா் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தவிர வைத்திக்குப்பம் பாப்பம்மா கோயில் இடுகாட்டில் உள்ள பாரதிதாசன் நினைவு மண்டபத்திற்குத் தமிழறிஞா்கள் அமைதி ஊா்வலமாகச் சென்று மலா் வணக்கம் செய்தனா். அதைத் தொடா்ந்து பட்டேல் சாலையில் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் நீா்மோா் வழங்கப்பட்டது. பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.முத்து தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.