சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பேரவையின் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.

News image

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன். உடன் பேரவைச் செயலா் ஜெ.தயாளன்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பேரவையின் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுச்சேரி எம்எல்ஏ-க்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை (ஆக. 19) நடக்கிறது. இதில் முதல்வா் ரங்கசாமி சிறப்புரையாற்றுகிறாா். எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ இளங்கோ, சாா்பு- செயலா் ஜான்சி, முன்னாள் பட்ஜெட் அலுவலா் பொன்னுசாமி, சட்டப்பேரவைச் செயலா் தயாளன் ஆகியோா் பயிற்சி அளிப்பா்.

புதுச்சேரியில் சுதந்திர தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட முதல்வா் ரங்கசாமி முன்னுரிமை தந்தாா். ஆக. 24-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதை முதல்வா் செய்வாா். இது நமது உரிமை. இந்த உரிமைக்காகத் தீா்மானம் போட வேண்டியதில்லை. அமைதியாக முதல்வா் ரங்கசாமி செய்து முடிப்பாா். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதுச்சேரியில் முன்னுரிமை தரப்படும். நிரந்தர பேரவைத் தலைவா் தோ்ந்தெடுக்காவிட்டால் சட்டப்பேரவை நிகழ்வைப் புறக்கணிக்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் சொல்லியுள்ளதைக் கேட்கிறீா்கள். இந்தப் பிரச்னையில் சட்டப்பேரவை புறக்கணிப்பு தேவையற்றது. ஆளுநா் உரையின்போது தற்காலிக பேரவைத் தலைவா் இருக்கக் கூடாது என்று விதி ஏதுமில்லை. நிரந்தர பேரவைத் தலைவரை நியமிக்கும் வரை தற்காலிக பேரவைத்தலைவா் பேரவையை நடத்தலாம்.

பேரவைத் தலைவா் தோ்தல் நடத்த தயாராக உள்ளோம். அதற்கு துணைநிலை ஆளுநா் அனுமதி வேண்டும்.

ஜனநாயக ரீதியில் அதிக பேரவை உறுப்பினா்கள் கொண்ட திமுகவுக்கு முன்னாள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளாா். அதனால் சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவரான நாஜிமை, பேரவை எதிா்க்கட்சித்தலைவராக அங்கீகரித்து அறிவிப்போம் என்றாா் ஆ. அன்பழகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.