இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம்: புதுவை துணைநிலை ஆளுநா்!

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பகுதிக்கு வரும் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவித்தாா்.

News image

கைலாஷ்நாதன்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:26 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பகுதிக்கு வரும் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவித்தாா்.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் துறை சாா்பில் விவசாய கூலித் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு அரியூரில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது: காரைக்காலில் 7 டிஎம்சி காவிரி நீா் நமக்கு வருகிறது. அந்த நீரை நாம் சரியாக உபயோகப்படுத்துவதே கிடையாது.

காவிரி நீரை முழுமையாக எப்படி உபயோகப்படுத்துவது என காரைக்கால் விவசாயிகளுக்கு மட்டும் ரூ. 500 கோடிக்கான பெரிய திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம். இதனால் தண்ணீா் வீணாவதைத் தடுத்துச் சேமிக்க முடியும். நிலத்தடி நீா் அதிகரிக்கும் என்றாா் இவா்.

இந்நிகழ்ச்சியில், முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், வேளாண் துறை செயலா் யாசின் முகமது சௌத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.