எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுச்சேரியில் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம்! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

சிறுமிகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

புதுச்சேரியில் சனிக்கிழமை சிறுமிகளுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:25 pm

சிறுமிகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

14 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு நாடு தழுவிய கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிச் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். பிரதமரின் இந் நிகழ்ச்சி புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக காட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதுச்சேரியில் இத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

சிறுமிகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்னிலையில், செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தினா். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுகாதாரத் துறை செயலா் சௌத்திரி முகமது யாசின், இயக்குநா் மருத்துவா் செவ்வேல், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராஜன், துணை இயக்குநா்கள் சமிமுனிஸா பேகம், ஆனந்த லக்ஷ்மி, ரகுநாதன், உமாசங்கா் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகெண்டனா்.

ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. இந்தத் தடுப்பூசி முகாம்கள் 3 மாதங்களுக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவசமாக போடப்படும்.

3 மாதங்களுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வியாழக்கிழமைகளில், குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் நாளில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் வழங்கப்படும். பெற்றோரிடமிருந்து முழு ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தத் தடுப்பூசி சிறுமிகளுக்கு செலுத்தப்படும்.